சல்மான் கான் வீட்டுக்கு முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
தனது தேர்தல் வாக்குறுதிகளை மீது நம்பிக்கையிழந்து போயுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஹிந்தி திரை நட்சத்திரங்களை வைத்து, வாக்குகளைச் சேகரிக்க ஆரம்பித்துள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்ததற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ள நிலையில், இந்த விடுதலையின் பின்புலத்தில் நடிகர் சல்மான் கானும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.