மேலும்

அரலகன்விலவில் மைத்திரியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு

maithri-hidepark (1)பொலன்னறுவ, அரலகன்விலவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்ட மேடை மீது இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன உரையாற்றி விட்டு இறங்கிச் சென்ற பின்னரே மேடை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

எனினும், இந்த சம்பவத்தில் ஐதேகவின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் றொசான் ரணசிங்கவே பொறுப்பு என்று மைத்திரிபாலவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *