தமிழர்களைக் குழப்ப சூழ்ச்சி – புலம்புகிறார் சம்பிக்க
அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ் சமூகத்தின் மனோநிலையை மாற்றும் முயற்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க.
“2005ம் ஆண்டு தேர்தலைப் புறக்கணித்தது போன்ற ஒரு முடிவுக்குள் தமிழர்களைத் தள்ளிவிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளால் ஒரு சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த தேர்தல் தமிழர்களுடன் தொடர்புடையது அல்ல என்றும், இந்த தேர்தல் மூலம், தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வரப்போவதில்லை என்றும், அவர்களால் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இது தவறானது கருத்து. இந்த தேர்தல் நாட்டில் உள்ள்ள ஒவ்வொருவருடனும் தொடர்புடையது.
இந்த தேர்தல் எல்லாருக்கும் அரசியல் மற்றும் சமூக ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.