“மகிந்தவுக்கு பிடித்துள்ளது பண்டா போபியா” – சந்திரிகா கிண்டல்
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தற்போது பண்டாரநாயக்க போபியா (பயம்) வினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்றுமாலை, எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனக்கு சந்திரிகா குமாரதுங்கவுடனேயே உண்மையான போட்டி என்றும், மைத்திரிபால சிறிசேனவை அவர் பகடைக்காயாகப் பயன்படுத்துவதாகவும், மகிந்த ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தது குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சந்திரிகா குமாரதுங்க,
“சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தற்போது பண்டாரநாயக்க போபியா (பயம்) வினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் அச்சத்துக்கு என்னிடம் மருந்து இல்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.