டிசம்பர் 20 இற்கு பின்னரே கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளிவரும் – மாவை சேனாதிராசா
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரை நிறுத்தாது என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, இந்த தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தான் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
“வரும் 8ம் நாள் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பேயில்லை.
பல்வேறு மட்டங்களிலும் உள்ள எமது பிரதிநிதிகளைக் கலந்துரையாடி வருகிறோம்.
இந்தக் கூட்டங்கள் இன்னமும் முடிவடையவில்லை.
இந்தக் கலந்துரையாடல்களின் நிறைவில், டிசம்பர் 20ம் நாள் அளவில் எமது இறுதி முடிவை எடுப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அதிபர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாது.
அதேவேளை, இந்த தேர்தல் குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கலந்துரையாடல் எதையும் நடத்தவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.