கம்யூனிஸ்ட் கட்சி மகிந்தவுக்கு ஆதரவு
சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், அதிபர் தேர்தலில் அவருக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மூன்று முக்கிய காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும், அனைத்துலக அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான லங்கா சமசமாசக் கட்சியும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த்து.
எனினும், அந்தக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஆறு பேர் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளித்துள்ளதை அடுத்து, அவர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.