மேலும்

இன்று நண்பகலுக்குப் பின்னர் தேர்தல் அறிவிப்பு – உறுதிப்படுத்தினார் பசில்

அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னர், இதற்கான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிடுவார் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கட்சி தாவவிருப்பதாக செய்திகள் உலாவிய இருவருக்கு நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தேர்தல் பரப்புரைக்கான இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க டெடிகம தேர்தல் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *