மேலும்

Archives

கட்டுநாயக்க தாக்குதலில் கோட்டை விட்டவரே கேத்தாராமவிலும் கோட்டை விட்டார்

கொழும்பில் கேத்தாராம மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த சிறிலங்கா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியில், பார்வையாளர்களுக்கிடையில் மோதல் நடந்த போது, அந்தப் போட்டியின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி மதுபோதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சிய பகுதிகளை விடுவிக்க சிறிலங்கா இராணுவம் மறுப்பு – மகிந்த கொடுத்துள்ள உற்சாகம்

வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கான பாதைகளை விடுவிப்பதற்கும், உறுதியளிக்கப்பட்ட எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கும் சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் பெயரையும், தேசியக் கொடியையும் மாற்றப் போகிறதாம் பிஜேபி

சிறிலங்காவின் பெயரையும், தேசியக் கொடியையும் மாற்றியமைப்பதற்கு தாம் நடவடிக்கை எடுப்போம் என்று பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பிஜேபி) உறுதி அளித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து போரிட்ட இலங்கையர் சிரியாவில் விமானத் தாக்குதலில் பலி

ஐஎஸ்Iஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசுடன் இணைந்து போரிட்ட சிறிலங்காவைச் சேர்ந்த கராத்தே பயிற்சி ஆசிரியர் ஒருவர் சிரியாவில் கடந்தவாரம் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பந்தனிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் மூதூர் முஸ்லிம்கள்

கிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக, முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

மகிந்தவைப் பிரதமராக்கும் கோசத்துடன் அனுராதபுரவில் தொடங்கியது பரப்புரை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று மாலை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

லண்டனில் முதல்வர் விக்னேஸ்வரன் – பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சரைச் சந்திப்பு

பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மூன்று பிரதி அமைச்சர்கள் பதவி விலகினர் – மைத்திரி கருத்துக்கு எதிர் நடவடிக்கையாம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூன்று பிரதி அமைச்சர்கள் இன்று தமது பதவிகளை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். பிரதிஅமைச்சர்களான சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன, எரிக் வீரவர்த்தன ஆகிய மூவருமே இன்று பதவி விலகியுள்ளனர்.