டக்ளஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி வேட்புமனுத் தாக்கல்
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ள போதிலும், அவர் எப்போது கையெழுத்திட்டார் என்பது தொடர்பாக குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட புதைகுழி அகழ்வின் போது, ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து. இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களை தாம் சொல்லிக் கொடுத்தவாறு ஊடக மாநாட்டில் பதில்களைக் கூறியதற்காக, கே.எவ்.சி உணவகத்துக்கு அழைத்துச் சென்று இராணுவப் புலனாய்வாளர்கள் விருந்து கொடுத்துள்ளனர்.
சிறிலங்காவில் 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில், பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக, மனோ கணேசனுடன் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியுள்ளது. கொழும்பில் நேற்று மாலை இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் போராளிகளின் புதிய அமைப்பான, ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக கடந்த மாதம் தனது சொந்தக் காணிக்குச் சென்ற பரமேஸ்வரி உதயகுமாரன் மிகவும் அதிர்ச்சியுற்றார். பரமேஸ்வரியின் சொந்த இடம் பளை வீமன்காமம். இவரது வீட்டில் எவ்வித தளபாடங்களும் காணப்படவில்லை.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பளிக்க மாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதாக, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.