மேலும்

Archives

இந்திய குடியரசுத் தலைவரிடம் நியமன ஆவணங்களை கையளித்தார் சிறிலங்காவின் புதிய தூதுவர்

இந்தியாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் எசல வீரக்கோன், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தனது நியமனம் தொடர்பான ஆவணங்களை அதிகாரபூர்வமாக கையளித்துள்ளார்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடக்கு,கிழக்கு – இன்று கடும் மழை, சூறாவளி எச்சரிக்கை

சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி வரும் நிலையில், வடக்கு கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்கத்தினால், சிறிலங்காவின், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெருமழை பெய்து வருகிறது.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்க – சிறிலங்கா கடற்படைகள் பேச்சு

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் கடல்சார் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக சிறிலங்கா – அமெரிக்க கடற்படைகளுக்கு இடையில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

பாரிஸ் கலையரங்கு தாக்குதலில் மட்டும் 100 பேர் பலி – பணயக் கைதிகள் அதிரடியாக மீட்பு

பிரான்சின் பாரிஸ் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல்களில் 140இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதேவேளை, பாரிசின் Bataclan arts centre  கலையரங்கில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 100இற்கும் அதிகமானோரை அதிரடித் தாக்குதல் மூலம் பிரெஞ்சுக் காவல்துறை இன்று அதிகாலை மீட்டுள்ளது.

பாரிசில் தொடர் தாக்குதல்கள் – 60 பேருக்கு மேல் பலி, 100 பேர் பணயக்கைதிகளாக பிடிப்பு

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் இன்றிரவு இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முற்றிலும் செயலிழந்தன – முழுஅடைப்பு போராட்டம் வெற்றி

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தினால், வடக்கு,கிழக்கு மாகாணங்கள் முற்றாகவே செயலிழந்து போயுள்ளன.

மர்மப்பொருள் விண்வெளியில் எரிந்து போனதா?

விண்வெளியில் இருந்து இன்று காலையில் சிறிலங்காவுக்குத் தெற்கேயுள்ள கடற்பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட மர்மப்பொருள், இன்னமும் விழவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை விழுகிறது மர்மப்பொருள் – தெற்கு கரையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் காத்திருப்பு

இன்று காலை சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில் விழும் என்ற எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருளைக் கண்காணிக்க ஐரோப்பிய விண்வெளி முகவர் அமைப்பின் விஞ்ஞானிகளும், இலங்கை விஞ்ஞானிகளும், தயார் நிலையில் உள்ளனர்.

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து திங்களன்று முடிவு – சிறிலங்கா அதிபரின் மற்றொரு வாக்குறுதி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

சோபித தேரரின் உடல் சற்றுமுன் தீயுடன் சங்கமம்

சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் வண.மாதுளுவாவே சோபித தேரரின்  உடல் ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள், பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் சற்று முன்னர் தீயுடன் சங்கமமானது.