மேலும்

Archives

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்கா விவகாரம் குறித்து பிரித்தானிய அமைச்சர் பேச்சு

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், நேற்று ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை – வாக்கெடுப்பை புறக்கணித்த இரு முக்கிய அமைச்சர்கள்

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், இரண்டு முக்கிய அமைச்சர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சலாவ வெடிவிபத்து- புலிகளுக்கு தொடர்பிருப்பதாக கண்டறியப்படவில்லை

கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த சான்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என்று, சிறிலங்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வேந்தராக அட்மிரல் தயா சந்தகிரி

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவக் குடும்பங்களுக்கான ரணவிருகம கிராமமே அழிந்தது – ஒளிப்படங்கள்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தினால், அதற்கு அருகில் இருந்த ரணவிருகம எனப்படும், சிறிலங்கா படையினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புத் தொகுதி முற்றாக அழிந்து போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் நம்பிக்கையிழந்து வரும் தமிழர்கள் – ஏபி

தமது நிலங்கள் மீள வழங்கப்படும் எனவும் போரின் போது காணாமற் போனவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்கப்படும் எனவும் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது தாம் ஏமாற்றமடைவதாக கருதுகின்றனர்.

பிரித்தானிய இராஜதந்திரிகள் சம்பந்தனுடன் சந்திப்பு

பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திரிகள் இருவர் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

10 வீதமான வெடிபொருட்களே ஆயுதக்கிடங்கில் இருந்தன – மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்ட போது, 10 வீத வெடிபொருட்களே அங்கு இருந்ததாக, சிறிலங்கா இராணுவத்தின், மேற்குப் பிராந்திய படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

உருக்குலைந்து தரைமட்டமாகக் கிடக்கும் சலாவ இராணுவ முகாம் – ஒளிப்படங்கள்

கொஸ்கம –  சலாவ சிறிலங்கா இராணுவ முகாம் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தினால் முற்றாகவே அழிந்து போயுள்ளது. வெடிபொருள்கள் சேமிக்கப்பட்டிருந்த, கட்டங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து தரைமட்டமாகியுள்ளன.

கொஸ்கமவில் பேரழிவை ஏற்படுத்திய ஆயுதக்கிடங்கு – ஒளிப்படங்கள்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் நேற்றுமாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தினால், அந்தப் பிரதேசமெங்கும் பாதிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலையிலும் இரண்டு பாரிய குண்டுகள் வெடித்த சத்தங்கள் கேட்டன.