மோடியின் ஆலோசனை சிறிலங்காவுக்குப் புரிந்திருக்கும் – வெங்கய்ய நாயுடு நம்பிக்கை
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய ஆலோசனையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஏற்றுச் செயற்படும் என்று இந்தியாவின் மத்திய இணைஅமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.