20ஆவது திருத்தம் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது
தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான யோசனை, நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்க அச்சகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான யோசனை, நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்க அச்சகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தேர்தல்முறையில் மாற்றம் செய்வதற்காக சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20ஆவது திருத்தச்சட்ட யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
புதிய தேர்தல் முறையினால் வடக்கில் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அனைத்துலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர்.
சிறிலங்கா பிரதமரினால் முன்வைக்கப்பட்டு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட, தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச்சட்ட யோசனை சிறுபான்மையினர் மற்றும் சிறுகட்சிகளைப் பாதிக்கும் என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) தெரிவித்துள்ளது.
20ஆவது திருத்தச்சட்டமாக கொண்டு வரப்படவுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமாலை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போதைப்பொருள் வியாபாரிகளையும், சமூகத்துக்கு வேண்டாதவர்களையும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்குத் தான் கடமைப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் தேர்தல் முறையை மாற்றியமைக்கும், உத்தேச 20வது திருத்தச்சட்டத்தில், வடக்கு, கிழக்கில் தற்போதுள்ள தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் மாற்றியமைப்பதில்லை என்று இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக, தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது தொடர்பான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமது யோசனைகளை நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு சிறிலங்காவின் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறுகட்சிகள், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான, அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.