மேலும்

Tag Archives: கொழும்பு

கோத்தா வழக்கின் போது அதிரடிப்படையினர் குவிப்பு – நீதிபதிகளிடம் முறையீடு

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் அளவுக்கு அதிகமான அதிரடிப்படையினர் காணப்பட்டமைக்கு, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீபா பீரிஸ் எதிர்ப்புத் தெரிவித்தார்.

11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்

மோசமான குற்றங்களுடன் தொடர்புடைய 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக, விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஐதேக வேட்பாளரை அறிவித்த பின்னரே தமது வேட்பாளரை அறிவிப்பாராம் மகிந்த

ஐக்கிய தேசியக் கட்சி அதிபர் வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நோக்கி நாளை இரண்டு நிவாரண உதவி தொடருந்துகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன், தொடருந்து ஒன்று, கொழும்பு, கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படைக் கப்பலும் கொழும்பு வந்தது

ரஷ்ய கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கும் நிலையில், அமெரிக்காவின் தரையிறக்கக் கப்பல் ஒன்று நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளது.

கொழும்பு துறைமுத்தில் இந்தியக் கடற்படையின் ஆய்வுக் கப்பல்

சிறிலங்கா கடற்பரப்பில் சமுத்திரவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இந்திய கடற்படையின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான ஜமுனா, நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சிறிலங்கா வரும் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள்

இந்திய கடலோரக் காவல்படையின் இரண்டு பாரிய ரோந்துக் கப்பல்கள் ஒரு வார காலப் பயணமாக நாளை, சிறிலங்காவுக்கு  வரவுள்ளன.

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டார் அட்மிரல்  விஜேகுணரத்ன

கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, அட்மிரல்  ரவீந்திர விஜேகுணரத்ன, சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளரைத் தாக்கிய அட்மிரல் ரவீந்திரவின் பாதுகாப்பு அதிகாரி

கொழும்பு – கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்காக முன்னிலையான, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை ஒளிப்படம் பிடிக்க ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியினால் தாக்கப்பட்டார்.

கைவிடுகிறது மகிந்த அணி – மைத்திரியின் திட்டம் தோல்வி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டாவது பதவிக்காலத்துக்காக போட்டியில் நிறுத்தப்படும் வாய்ப்புகள் இல்லை என்று கொழும்பு ஊடகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.