மேலும்

Tag Archives: கொழும்பு

முன்னாள் மொட்டு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கைது

இலஞ்சம் மற்றும் ஓழல்  ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது பயத்தில் விசாரணைக்கு வராமல் பதுங்கினார் ராஜித சேனாரத்ன

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நேற்று விசாரணைக்கு சமூகமளிக்காமல் நழுவியுள்ளார்.

டொக்யார்ட் நிறுவனத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் பங்குகளை இந்திய நிறுவனத்துக்கு விற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னிலை சோசலிசக் கட்சி  அறிவித்துள்ளது.

டியாகோ கார்சியாவில் இலங்கையர்கள் தடுப்பில் இல்லை

டியாகோ கார்சியாவில் இருந்து,  அறுபதுக்கும் மேற்பட்ட இலங்கையர்களை விமானம் மூலம் கொழும்பு திரும்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உதவியுள்ளது என  வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம்  இராஜாங்க அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு கொள்கலன் முனையம் எந்த நாட்டுக்கும் விற்கப்படாது – சிறிலங்கா அரசு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ மாத்திரமன்றி, எந்தவொரு வெளிநாட்டுக்கும் விற்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா இன்று 100 வீதம் வழமைக்குத் திரும்பும் – இராணுவத் தளபதி நம்பிக்கை

சிறிலங்கா இன்று முற்றிலும் வழமையான நிலைமைக்குத் திரும்பும் என்று சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் பகுதி கட்டளைத் தளபதியும், கொழும்பு கூட்டு நடவடிக்கை கட்டளையகத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் விசாரிக்கப்படவுள்ள கோத்தாவுக்கு எதிரான வழக்கு

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு மேல் நீதிமன்றத்தில் அடுத்த மாதம், நாளாந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

கொழும்பு கொள்கலன் முனையத்தை இந்தியா, ஜப்பான், சிறிலங்கா கூட்டாக அபிவிருத்தி

கொழும்பு துறைமுகத்தை இந்தியா, ஜப்பான், சிறிலங்கா அரசாங்கங்கள் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வன்முறையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இராணுவத்துக்கு அதிகாரம்

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்ச பலத்தைப் பிரயோகிக்கவும், துப்பாக்கிச் சூடு நடத்தவும் சிறிலங்கா படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துறைமுக நகருக்காக 100 மில்லியன் டொலர் சீனாவிடம் கடன் பெறுகிறது சிறிலங்கா

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திப் பணிகளுக்காக, 100 மில்லியன் டொலர் கடனை சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து பெறுவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.