யாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. தேசிய அபிவிருத்தி வங்கிக்கும், சீலெக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் இது தொடர்பான கடன் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிறிலங்காவின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தை அமைக்கவும், 3400 கி.மீ நீளமான கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யவும், ஆசிய அபிவிருத்தி வங்கி, 350 மில்லியன் டொலர் கடனுதவியை சிறிலங்காவுக்கு வழங்கவுள்ளது.
பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தலா 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த காற்றாலை மின் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.