மேலும்

Tag Archives: கடற்படை

பணிப்பாளராக கடற்படை அதிகாரி – போர்க்கொடி உயர்த்தும் சுங்க அதிகாரிகள்

சுங்கப் பணிப்பாளராக முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரியை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கத் திணைக்கள அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்

திருகோணமலை – கிண்ணியாவில், சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை நோக்கி சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, ஆற்றில் குதித்த இருவர் உயிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கொழும்பு கடற்படைப் பயிற்சி ஆரம்பம் – 17 போர்க் கப்பல்கள், படகுகள் பங்கேற்பு

சிறிலங்கா கடற்படை புதிதாக ஆரம்பித்துள்ள, கொழும்பு கடற்படை பயிற்சி -2019 ( CONEX) நேற்று ஆரம்பமாகியுள்ளது. எஸ்எல்என்எஸ் சிந்துரால என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலில்  இதன் ஆரம்ப நிகழ்வு நேற்றுக்காலை இடம்பெற்றது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்

இந்தியாவின் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியாவின் 45.27 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும்.

400 பில்லியன் ரூபாவை நெருங்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவினம்

இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 400 பில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் தமிழ்நாடு மீனவர் மரணம் – சடலம் யாழ்ப்பாணத்தில்

நெடுந்தீவுக் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இந்திய மீனவர் ஒருவரின் சடலம் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு புதிய தளபதி

சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக றியர் அட்மிரல் பியல் டி சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – 2 கடற்படையினர் கைது

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, மேலும் இரண்டு சிறிலங்கா கடற்படையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய நாடுகளின் கடற்படைகள் பாவித்த கப்பல்கள் நன்றாகவே உள்ளன – சிறிலங்கா கடற்படை

ஏனைய நாடுகளின் கடற்படைகள் பயன்படுத்திய கப்பல்களை நல்ல நிலையிலேயே சிறிலங்கா கடற்படை பெற்றுக் கொள்கிறது என்று சிறிலங்கா கடற்படையின்  தலைமை அதிகாரி றியர் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

2019 இல் 306.1 பில்லியன் ரூபாவை விழுங்குகிறது பாதுகாப்பு செலவினம்

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.