மேலும்

Tag Archives: ஐ.நா

ஐ.நா, அமெரிக்காவிடம் முறையிட்ட நாமல்

அமைதியாகப் போராட்டம் நடத்திய தம்மை சிறிலங்கா காவல்துறை கைது செய்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரிடமும், அமெரிக்காவிடமும் முறையிட்டுள்ளார்.

ஐ.நா உயர்மட்டக் குழுக்கள் சிறிலங்கா வரவுள்ளன

அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஐ.நாவின் இரண்டு உயர்மட்டக் குழுக்கள்  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களை கழற்றி விட்டு ஐ.நா சென்ற மைத்திரி

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா தடையை மீறி வடகொரியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி – சிறிலங்கா விசாரணை

ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக,  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் சிறிலங்கா

சிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது சிறிலங்காவில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் கோட்பாட்டில் தங்கியிருக்கின்றது.

ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் முரண்படாது – ராஜித சேனாரத்ன

மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் முரண்படாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் நாளை சிறிலங்கா வருகிறார்

ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஐ.நாவின் வழிகாட்டு முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது – விஜேதாச ராஜபக்ச

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எப்படி வரைய வேண்டும் என்ற ஐ.நாவின் வழிகாட்டுமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் வரட்சியால் 9 இலட்சம் பேரின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ஐ.நா அறிக்கை

சிறிலங்காவில் வரட்சி மற்றும் வெள்ளத்தினால் உணவு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 9 இலட்சம் மக்களின் உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக, ஐ.நா அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.