அட்மிரல் கரன்னகொடவிடம் இதுவரை 25 மணி நேரம் விசாரணை
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் நேற்று நான்காவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டது.