துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தார் அஜித் டோவல் – கோத்தா குற்றச்சாட்டு
சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், அழுத்தம் கொடுத்தார் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.