சிறிலங்கா வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா
மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகார பணியக அமைச்சர் அகமட் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகார பணியக அமைச்சர் அகமட் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று காலை, பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்ட அமைச்சர்களைக் கொண்ட குழு பங்கேற்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் – அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மான வரைவு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் மார்ச் 5ஆம் நாள் இடம்பெறவுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத் தலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை அளித்து விட்டு, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரியிருப்பது குறித்து முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மனித உரிமைகள் விவகாரங்களில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் மீது, அரச சார்பற்ற நிறுவனங்கள் கடும் அதிருப்தியை வெளியிடவுள்ளன.
சிறிலங்காவில் பணியாற்றும் போது, மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது என்று சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு, அனுமதி கோரும் பத்திரத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் ஆகியன தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டக் குழு, அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.