மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

பதவி விலகும் மகிந்தவின் முடிவுக்கான காரணம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், ஒக்ரோபர் 26ஆம் நாள் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, இன்று தனது பதவியை விட்டு விலக முடிவு செய்திருக்கிறார்.

நாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, நாளை பதவியில் இருந்து விலகவுள்ளார்.

அமைச்சர்களுடன் பதவி விலகுவார் மகிந்த?

சிறிலங்காவின் பிரதமராக கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் நியமிக்கப்பட்ட, மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையுடன், பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் இன்றிரவு முக்கிய முடிவு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.

மகிந்தவின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு

மகிந்த ராஜபக்சவும், அவரது அமைச்சர்களும், பிரதமராகவும், அமைச்சர்களாகவும் செயற்படுவதற்குத் இடைக்காலத் தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

‘கல்வி அமைச்சர் அகில விராஜ்’ – ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்த மைத்திரி

கூட்டு அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் படத்துடன் அச்சிடப்பட்டிருந்த, மாணவர்களுக்கான சீருடைத் துணி உறுதிச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

மைத்திரியை இன்று சந்திக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று தமது அணியினருடன் முக்கியமான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

முட்டாள்தனம் செய்து விட்டார் மகிந்த –  கோமின் தயாசிறி

மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் நாள் வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மகிந்த ராஜபக்ச பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என்று ராஜபக்ச விசுவாசியான, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு நீதிமன்றம் தடை – கொமன்வெல்த் வரலாற்றில் முதல் முறை

கொமன்வெல்த் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் ஒன்று, இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது என்று சட்டவாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இடைக்காலத் தடைக்கு எதிராக நாளை உச்சநீதிமன்றில் முறையீடு செய்கிறார் மகிந்த

சிறிலங்கா பிரதமராகச் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விதித்துள்ள இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நாளை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக, மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.