மேலும்

Tag Archives: அமெரிக்கா

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரிஸ் சிறிலங்கா பிரதமருடன் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

சமந்தா பவரின் இடத்தைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளிப் பெண் நிக்கி ஹாலே

அமெரிக்காவின் புதிய அதிபராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவராக தென் கரோலினா மாகாண ஆளுனர் நிக்கி ஹாலேயை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்காமல் தப்பிக்க சிறிலங்கா முயற்சி – அமெரிக்க நிபுணர் சந்தேகம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தல் உள்ளிட்ட, நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தாமதித்து வருவதானது, போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதை தவிர்க்கும் முயற்சியாக இருக்கக் கூடும் என்று போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் இப்போது சிறுபான்மையினர்” – மணலாறு சிங்களக் குடியேற்றவாசிகளை உசுப்பேற்றிய மகிந்த

சிங்களவர்களைச் சிறுபான்மையினராக்குவதற்கு, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் சதி செய்வதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயண வசதிகள்

வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, விமானப் பயண வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப்பின் ஆட்சி சிறிலங்காவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இது ஒரு வேடிக்கையான விடயமாக நோக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தற்போது டொனால்ட் ட்ரம்ப் உலகின் அதிகாரம் மிக்க ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் கைது – டிசெம்பர் 2 வரை விளக்கமறியல்

நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை, விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலர் அடுத்த ஆண்டு சிறிலங்கா வருவார்

அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலர், அடுத்த ஆண்டில் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்கள் சிறிலங்காவை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் – உதய கம்மன்பில

அதிபர் தேர்தலின் முடிவுகளை ஏற்றுக் கொண்ட, சிறிலங்காவை அமெரிக்கா முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் வெற்றிக்கு காரணம் கூறுகிறார் கோத்தா

தொழில்சார் அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் ஈட்டிய வெற்றி எடுத்துக் காட்டுவதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.