மேலும்

Tag Archives: அமெரிக்கா

அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கிறது சிறிலங்கா – அதிர்ச்சியுடன் தொடங்கும் புத்தாண்டு

புத்தாண்டு சிறிலங்காவுக்கு அதிர்ச்சியுடன் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை சிறிலங்கா 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாளில் இருந்து இழக்கவுள்ளது.

உணவுப் பாதுகாப்புச் சுட்டியில் 66 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது சிறிலங்கா

உலகளவிலான உணவுப் பாதுகாப்புச் சுட்டியில் 113 நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா 66 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்க விரும்பும் இந்தியா

சிறிலங்கா உட்பட பத்து கரையோர நாடுகளுடன் இந்தியா தனது கடல்சார் புலனாய்வு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக நவம்பர் 1 அன்று இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா அறிவித்திருந்தார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கோவா கடல்சார் கருத்தரங்கிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்குமாம் அமெரிக்கா

சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனிடம் இருந்தே நாம் போரைக் கற்றுக்கொண்டோம் – சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்தே நாம் போரைக் கற்றுக்கொண்டோம் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை, அனைத்துலக பிரகடனங்களில் கையெழுத்திட சிறிலங்காவுக்கு அழுத்தம்

தெளிவான காலவரம்புடன் கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும், ரோம், அனைத்துலக குற்றவியல் உடன்பாடுகளில் கையெழுத்திட வேண்டும் என்றும், சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியுள்ளது.

திடீரென அமெரிக்கா சென்ற பிரசாத் காரியவசம் – இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான  முதன்மை பிரதி உதவிச் செயலர்,  அலிஸ் வெல்ஸ் அம்மையாரை, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சித்திரவதை குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் சிறிலங்கா

அண்மைக்காலங்களில் சிறிலங்காவில் 50இற்கும் அதிகமான தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பான அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் விசாரணை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டதை அடுத்து, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் சிறிலங்கா வருகை

அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு  ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் கப்டன் பிராங்க் லிங்கோயஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பாதுகாப்புத் தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பலை வழங்குகிறது அமெரிக்கா

அமெரிக்க கடலோரக்காவல் படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட போர்க்கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.