மேலும்

Tag Archives: அமெரிக்கா

ஜப்பானின் இராட்சத நாசகாரி போர்க்கப்பல் சிறிலங்கா வருகிறது

ஜப்பானியக் கடற்படையின் மிகப்பெரிய உலங்குவானூர்தி தாங்கி, நாசகாரிப் போர்கப்பலான இசுமோ, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகும் தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் ரணில், சம்பந்தன் உரை

புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.

அம்பாந்தோட்டையில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்

அம்பாந்தோட்டையில் போல் ரிவர் என்ற அதிவேக போக்குவரத்துக் கப்பலில் வந்த அமெரிக்க கடற்படையினர், ஜப்பான், அவுஸ்ரேலியா மற்றும் சிறிலங்கா கடற்படை மற்றும் சிவில் அதிகாரிகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்காவுடன் மீண்டும் இரகசிய பாதுகாப்பு உடன்பாட்டுக்கு தயாராகிறது சிறிலங்கா – ஜேவிபி

போர் உதவி வசதிகளுடன் தொடர்புடைய இரகசிய உடன்பாடு ஒன்றை அமெரிக்காவுடன், செய்து கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.

பிரித்தானியாவுடன் அமெரிக்கா ஜெனிவாவில் பேச்சு – சிறிலங்கா குறித்தும் ஆராய்வு

சிறிலங்கா, உள்ளிட்ட பூகோள மனித உரிமை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பாக அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் ஜெனிவாவில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஜெனிவாவில் 2 ஆண்டுகள் காலஅவகாசம் கோரவுள்ளதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரப் போவதாக, சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா குறித்த தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை இம்முறையும் அமெரிக்காவே ஏனைய இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து முன்வைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – ஜெனிவாவில் சுமந்திரன் பரப்புரை

2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்கா எந்த மாற்றங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டங்கள் முதலீடுகளை பாதிக்கும் – சீனத் தூதுவர் எச்சரிக்கை

அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கைத்தொழில் முதலீட்டு வலயத்தில் முதலீடு செய்ய ஏற்கனவே இணங்கியிருந்த முதலீட்டாளர்களைத் திசை திருப்பி விடும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா படைகள் மீது அவநம்பிக்கை வெளியிட்ட முன்னாள் நிதியமைச்சர் – சிஐஏ ஆவணத்தில் தகவல்

சிறிலங்கா படைகள் மீது தமக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல், அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிஐஏ) இரகசிய ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.