மேலும்

நீதிமன்றை அவமதித்த கோத்தாவின் சட்டவாளர்கள் – கோபத்தை வெளிப்படுத்திய நீதியரசர்

கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குபட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அறிவித்த போது, நீதிமன்ற அறையில் இருந்த அவரது சட்டவாளர்கள் கைதட்டியும் பெரும் கூச்சல் எழுப்பியும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர்.

வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய கோத்தா

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமைக்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மாலை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பொதுஜன பெரமுனவினர் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

கோத்தாவின் குடியுரிமைக்கு எதிரான மனு தள்ளுபடி

பொதுஜன பெரமுனவின் அதிபர்  வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை சிறிலங்கா குடிமகனாக ஏற்றுக் கொள்வதை தடுக்கும், உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி,  மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எந்த நேரமும் தீர்ப்பு வெளியாகலாம் – நீதிமன்ற வளாகத்தில் பெரும் பாதுகாப்பு

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பணம் செலுத்தினார் சமல் ராஜபக்ச

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

யாழ். அனைத்துலக விமான நிலையம் – 17ஆம் நாள் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வரும் 17ஆம் நாள் விமான சேவைகள் ஆரம்பித்து வைக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

சமல் ராஜபக்சவும் குமார வெல்கமவும் சுயேட்சையாகப் போட்டி?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் போட்டியிடவுள்ளனர்.

கோத்தாவின் குடியுரிமை – இன்று மாலை 6 மணிக்கு தீர்ப்பு

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு அளிக்கப்படவுள்ளது.

பொதுவேட்பாளரை தேடும் தமிழ் பிரமுகர்கள் குழு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை போட்டியில் நிறுத்துவதற்கான முயற்சிகளில் தமிழ் மக்கள் பேரவை மற்றும் பேரவையினால் நியமி்க்கப்பட்ட பிரமுகர்கள் குழு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலுக்கு எதிராக மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அறிவிப்புக்குத் தடைவிதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.