மேலும்

முன்னாள் புலி உறுப்பினர் வீட்டில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு – மூவர் கைது

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை வரும் 17ஆம் நாள் ஆரம்பித்து வைப்பதற்கான அனைத்து கள வேலைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின்  பணிப்பாளர் நாயகம் எச்எம்சி நிமலசிறி தெரிவித்துள்ளார்.

விதிமுறைகளை மீறிய நாமலின் ஊடகப் பிரிவு – கீச்சகப் பக்கம் இடைநிறுத்தம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவின் கீச்சக கணக்கு, குறித்த சமூக ஊடக நிறுவனத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வியாழன்று பலாலியில் பரீட்சார்த்த விமானத்தை தரையிறக்குகிறது அலையன்ஸ் எயர்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கு  வரும் வியாழக்கிழமை சென்னையில் இருந்து பரீட்சார்த்த விமானப் பறப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டுக்கு சாதகமற்ற உடன்பாடுகள் ரத்து செய்யப்படும் – சஜித்

எதிர்காலத்தில் நாட்டிற்கு சாதகமற்ற அனைத்துலக உடன்பாடுகள் ரத்து செய்யப்பட்டு சாதகமான ஒப்பந்தங்கள் மட்டுமே செயற்படுத்தப்படும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புளொட், ரெலோவின் ஆதரவைப் பெற ஜேவிபி முயற்சி

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக, அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ள அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் வஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கோத்தாவுக்கு கருணை காட்டும் சிறிலங்கா நீதிமன்றங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு சாதகமான முறையில் சிறிலங்கா நீதிமன்றங்கள் முடிவெடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிவாஜிலிங்கத்துக்கு பாதுகாப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிமொழி

தமக்குப் போதிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய உறுதி அளித்துள்ளார் என்று அதிபர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும், எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சஜித் பக்கம் சாய்கிறது ஐக்கிய இடதுசாரி முன்னணி

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, ஐக்கிய இடதுசாரி முன்னணி, ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவுக்கு அளிக்க முடிவு செய்த ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது

எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.