மேலும்

ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது – மகிந்த அணி வைக்கும் ‘செக்’

நாடாளுமன்றத்தில் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரதமர், அமைச்சர்கள் பதவி நீக்கப்படவில்லை – என்கிறார் பீரிஸ்

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பணியில் ஈடுபடுவதற்கே மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதே தவிர, அவர்களை சட்டரீதியற்றவர்கள் என்ற அறிவிக்கவில்லை என, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு – ஜனவரி 31 இல்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, எதிர்வரும் ஜனவரி 31ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தாமதமின்றி தீர்ப்பை அளிக்குமாறு கோருகிறார் மைத்திரி

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்பை தாமதமின்றி அறிவிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரிடம் கோரவுள்ளார்.

ரணிலை நீக்கியதற்கு எதிரான வழக்கு – ஜனவரியில் விசாரணை

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கு எதிராக தம்பர அமில தேரர் தாக்கல் செய்துள்ள மனு மீதுான விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி 07ஆம் நாளுக்கு ஒத்திவைத்துள்ளது.

ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு? – இன்று முடிவு

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறு நாடாளுமன்றத்தில்  ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வரவுள்ள  நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மைத்திரியை இன்று சந்திக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று தமது அணியினருடன் முக்கியமான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அரசியல் நெருக்கடிக்கு அனைத்துலக தலையீடுகளே காரணம் – கோத்தா

உள்நாட்டுப் படைகள் வலுவாகவும், நாட்டைப் பாதுகாக்கும் ஆற்றலுடனும் இருப்பதால், வடக்கிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புத் தேவையில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத் தலையீடுகளால் அதிருப்தியில் மகிந்த

இப்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை இலகுவாக தீர்க்க முடியும் என்றும், இந்த விவகாரம் நீதிமன்றங்களிடம் இருப்பதால் பொறுமையாக செயற்பட வேண்டியிருப்பதாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ரணிலுக்கோ, கட்சிக்கோ துரோகம் செய்யமாட்டேன் – சஜித் பிரேமதாச

பிரதமர் பதவிக்காக தான், ரணில் விக்கிரமசிங்கவையோ, கட்சியையோ காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.