மேலும்

நான்கு இலங்கைத் தமிழர்கள் சென்னையில் கியூ பிரிவினால் கைது

போலி இந்தியக் கடவுச்சீட்டு மற்றும், நுழைவிசைவுகளைத் தயாரித்து, இலங்கைத் தமிழ் அகதிகளை நேபாளம் வழியாக ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு அனுப்பி வந்த இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர், கியூ பிரிவு காவல்துறையினரால் சென்னையில் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படம் சிறிலங்கா அதிபருக்கு கையளிப்பு

சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், போர் தவிர்ப்பு வலயம், ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கப் பிரதியொன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அந்த ஆவணப்படத்தை தயாரித்த கலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் கனவுக்கு ஆப்புவைத்த 19வது திருத்தச்சட்டம் – தப்பினார் பசில்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இன்று நடைமுறைக்கு வருகிறது 19வது திருத்தச்சட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் இன்று தொடக்கம், நடைமுறைக்கு வரவுள்ளதாக, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

சிகிரியாவில் கிறுக்கியதால் சிறை சென்ற மட்டக்களப்பு உதயசிறி இன்று காலை விடுதலை

பழமை வாய்ந்த சிகிரியா குன்றின் பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதி, அதனைச் சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சித்தாண்டியைச் சேர்ந்த, சின்னத்தம்பி உதயசிறி என்ற இளம் பெண் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதை வரவேற்கிறது அமெரிக்கா

சிறிலங்காவில் அதிபரின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இரண்டாவது மீட்புக் குழுவை பயணிகள் விமானத்தில் அனுப்பியது சிறிலங்கா

நிலநடுக்கத்தினால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, 97 சிறிலங்கா படையினரையும், 17 தொன் எடையுள்ள அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிய இரண்டாவது விமானம் இன்று சிறிலங்காவில் இருந்து காத்மண்டு சென்றது.

19வது திருத்தத்தை நிறைவேற்றிய சிறிலங்காவுக்கு பிரித்தானியா பாராட்டு

19வது அரசியலமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில், சிறிலங்காவுக்கான புதிய பிரித்தானியத் தூதுவர், ஜேம்ஸ் டௌரிஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத் திட்டம் குறித்த அரசின் நிலைப்பாட்டை வெளியிட ஜூன் 15 வரை காலஅவகாசம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான, சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, வெளிப்படுத்துவதற்கு காலஅவகாசம் தேவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சிறிலங்காவின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜோன் கெரியின் பாதுகாப்புக்காக 200 படை அதிகாரிகள், 40 மோப்ப நாய்கள் சிறிலங்கா வருகை

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் பாதுகாப்புக்காக, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 200 பேர், 40 மோப்ப நாய்கள் சகிதம், சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.