நான்கு இலங்கைத் தமிழர்கள் சென்னையில் கியூ பிரிவினால் கைது
போலி இந்தியக் கடவுச்சீட்டு மற்றும், நுழைவிசைவுகளைத் தயாரித்து, இலங்கைத் தமிழ் அகதிகளை நேபாளம் வழியாக ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு அனுப்பி வந்த இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர், கியூ பிரிவு காவல்துறையினரால் சென்னையில் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.