மேலும்

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் திறந்துவைப்பு

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்திர் சிலையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை திறந்து வைத்தார்.

சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதத்தில் குதித்தார் சோமவன்ச அமரசிங்க

ஜேவிபியின் முன்னாள் தலைவரும், அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறியவருமான சோமவன்ச அமரசிங்க கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாளை அதிகாலை கொழும்பு வருகிறார் ஜோன் கெரி – கூட்டமைப்பையும் சந்திப்பார்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, நாளை அதிகாலையில் கொழும்பை வந்தடைவார் என்று ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்மக்களின் கோரிக்கை மீது கவனம் செலுத்த வேண்டும் – ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் கருத்து

சிறிலங்கா அதிபர் தனது முதல் 100 நாள் ஆட்சியையும் பூர்த்தியாக்கியுள்ளார். தனக்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த மகிந்த ராஜபக்சவை விட தனது நிர்வாகத்தை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன 100 நாள் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.

19வது திருத்தத்தை எதிர்த்தவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்துகிறது சுதந்திரக் கட்சி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்காத தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.

போர்க்குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த கடமைப்பட்டுள்ளது அமெரிக்கா – சூசன் ரைஸ்

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில்- இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காக விசாரணைக் குழுக்களையும், பொறிமுறைகளையும் உருவாக்குவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளதாக, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு நிதி சேகரித்த 5 ஈழத்தமிழர்களுக்கு ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்கில் உள்ள நீதிமன்றத்தினால் நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீனவர்களின் அத்துமீறல் – ஒளிப்பட ஆதாரங்களை இந்தியாவிடம் கொடுத்தது சிறிலங்கா

தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி நுழைவது தொடர்பான, ஒளிப்பட ஆதாரங்களை கையளித்துள்ளதாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சுக்கு சிறிலங்கா கடற்படை, கையளித்துள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாமல் ராஜபக்சவுக்கும் ஆப்பு வைத்தது 19வது திருத்தச்சட்டம்

2021ம் ஆண்டு நடைபெறும் சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில், ராஜபக்ச குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்ச போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளார். 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்கா அதிபர் தேர்தலில், போட்டியிடும் வேட்பாளரின் ஆகக்குறைந்த வயதெல்லை, 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செப்ரெம்பரில் பிரச்சினையை எதிர்கொள்ளப் போவது ஜோன் கெரியா- மைத்திரியா?

தமது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பணியாற்றுவதன் மூலம் ஜோன் கெரியை தம் பக்கம் கவர்ந்திழுக்க முடியும் என ராஜபக்சக்கள் கருதிய போதிலும், கெரி தனது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ராஜபக்சக்களை செயற்பட வைக்க முயன்றார். அதன் விளைவு என்ன?