மேலும்

மீண்டும் விரைவில் மேடைக்கு வருவேன் என்கிறார் மகிந்த

mahinda-vajraதாம் விரைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேடைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

குருநாகலில் நேற்று நடந்த மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வருவதற்கான, கூட்டம் நேற்று குருநாகல், வெலகெதர மைதானத்தில், இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் தடையையும் மீறி சுமார் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்தக் கூட்டத்துக்குபு மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்திருந்த செய்தியில், தாம் விரைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேடைக்கு வரவுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் தாம் எப்போது மேடைக்கு வர வேண்டும் என்பதை மக்களே தீர்மானிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *