மேலும்

பிரிவு: செய்திகள்

போரில் கணவனை இழந்த பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் அவலம் – ஏஎவ்பி

சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் நிறைவுற்று ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தப் போரின் போது தமது கணவன்மாரை இழந்து தவிக்கும் பெண்களின் நிலை இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை.

திருகோணமலையில் சிறிலங்கா அதிபருக்கு கடற்படை படகுகளின் அணிவகுப்பு மரியாதை

முப்பதாண்டுகால தீவிரவாதத்தை தோற்கடிப்பதில், முக்கிய பங்காற்றிய சிறிலங்கா கடற்படைக்கு, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் கைதடியில் கைது

விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்த குற்றச்சாட்டில், கைதடியில் வைத்து இரண்டு பேரை சிறிலங்கா காவலதுறையினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மகிந்தவின் வீட்டில் மாற்று வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து வரும் நிலையில், தனியானதொரு வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் மகிந்த ஆதரவு அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க கடும் போட்டி

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டம் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் போட்டியிட புலிகளின் முன்னாள் முக்கிய பிரமுகர் விண்ணப்பம்

வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு, விடுதலைப் புலிகளின் முன்னாள்  முக்கிய போராளியான ரூபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பித்துள்ளார்.

மகிந்த அணியிடம் இரண்டு திட்டங்கள் – என்கிறார் விமல் வீரவன்ச

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயம் போட்டியிடுவார் என்றும், அவருடன் இணைந்து தேசிய சுதந்திர முன்னணியும் போட்டியிடும் என்றும் அந்தக் கட்சியின் தலைவரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் கையில் ஐ.நா அறிக்கை கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை

போரின் போது நடந்த மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும் வரை, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படாது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் யாழ், திருமலை, அம்பாறை மாவட்டங்களுக்கான ஆசனப்பங்கீடு குறித்து இறுதி முடிவு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடு குறித்து ஏற்கனவே பெரும்பாலும், இணக்கப்பாடு எட்டப்பட்டு விட்டதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் குதிக்க பிஜேபி ஆக உருமாறுகிறது பொது பல சேனா

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், பொது பலசேனா அமைப்பு, பொது ஜன பெரமுன ( பிஜேபி) என்ற பெயரில் போட்டியிடவுள்ளதாக, அந்த அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.