மேலும்

பிரிவு: செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவு

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவாகும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஜூலை 1இல் அதிகாரபூர்வ முடிவை மெதமுலானவில் வைத்து அறிவிக்கிறார் மகிந்த

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது அதிகாரபூர்வ நிலைப்பாட்டை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் ஜூலை 1ஆம் நாள் அறிவிக்கவுள்ளார். மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தலால் இரு கட்டங்களாக உயர்தரத் தேர்வு – ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிருப்தி

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால்,  க.பொ.த உயர்தரத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மகிந்த- மைத்திரி பனிப்போர் – ஜூலை 1இல் இறுதி முடிவு

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச அணிக்கும், மைத்திரிபால சிறிசேன அணிக்கும் இடையில் பனிப்போர் நடந்து வரும் நிலையில் ஜூலை 1ஆம் நாள் இறுதியான முடிவு ஒன்று தெரியவரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக அமெரிக்க கண்காணிப்பாளர்கள்?

சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க, அமெரிக்காவில் இருந்து முதல்முறையாக கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படவுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகள் – தமிழரசுக் கட்சி மத்திய குழு திருமலையில் ஆலோசனை

அடுத்த நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், மைத்திரியுடன் பேச்சுத் தொடரும்- சம்பந்தன்

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஆரம்பித்துள்ள பேச்சுக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், அந்தப் பேச்சுக்கள் அவரது தலைமையிலான அடுத்த அரசாங்கத்திலும் தொடரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சீனாவை முறியடிக்க சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்தியா போர்ப்பயிற்சி

இந்தியப் பெருங்கடலுக்குள் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், சிறிலங்கா உள்ளிட்ட முக்கியமான ஆசிய பசுபிக் நாடுகளுடன் இந்தியா கடற்படைப் போர்ப்பயிற்சிகளை நடத்தவுள்ளது.  ரைம்ஸ் ஒவ் இந்தியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அஞ்சல் மூலம் வாக்களிக்க ஜூலை 14ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூலை 3ஆம் நாள் தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுதந்திரமான நீதி முறைமையை கொண்டுள்ளதாம் சிறிலங்கா – மெச்சுகிறார் இராணுவப் பேச்சாளர்

மிருசுவில் படுகொலை வழக்கில் இராணுவ அதிகாரியான சுனில் இரத்நாயக்கவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமை, சுதந்திரமானதும், அசாதாரணமானதுமான நீதி முறைமையைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.