மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

வட- கிழக்கில் பொருத்து வீடுகளைப் பெற 92 ஆயிரம் பேர் விண்ணப்பம்

வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு, 92ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக,  சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்றும் நடக்கவில்லை சிறிலங்கா அதிபர் – வடமாகாண முதல்வர் சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று நடக்கவிருந்த சந்திப்பு, கடைசி நேரத்தில் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கு 1.5 பில்லியன் டொலர் கடன் வழங்க அனைத்துலக நாணய நிதியம் இணக்கம்

சிறிலங்காவின் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவும் வகையில், 1.5 பில்லியன் டொலர் கடனை வழங்கவுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம் இன்று அறிவித்துள்ளது.

பாலம் அமைப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேசவில்லை – சிறிலங்கா

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் எந்தப் பேச்சுக்களும் நடத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பின் பின்னரே முகாமுக்குள் நுழைந்தார் சம்பந்தன் – சிறிலங்கா இராணுவம்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள், முன்னறிவிப்புச் செய்து விட்டே சென்றார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கட்டுநாயக்கவில் கைது

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சமூகவலைத்தளத்தில் அச்சுறுத்தல் விடுத்தவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யபப்பட்டுள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன் கைது

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளரான சிவகரன், நேற்று மன்னாரில் வைத்து, தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், கைது செய்யப்பட்டார்.

பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் உடன் விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்

கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். சிறிலங்கா இராணுவத்தினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாளை சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாளை முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனி அரசை நிறுவ கூட்டமைப்பும், தமிழ் அரசுக் கட்சியும் முயற்சி- உயர்நீதிமன்றில் மனு

சிறிலங்காவில் தனி அரசு ஒன்றை உருவாக்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.