மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு முடக்கப்பட்டது ஏன்?

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருப்பதாக, தகவல் வெளியிட்டதாலேயே, சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவு நேற்று முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து சீனா- சிறிலங்கா அடுத்தமாதம் உயர்மட்டப் பேச்சு

சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுவது தொடர்பாக, சிறிலங்காவும், சீனாவும் அடுத்தமாதம் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பில் இராணுவத்தை ஈடுபடுத்துவது சட்டவிரோதம்

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்துவது சட்ட விரோதம் என்பதனாலேயே, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.

மகிந்த அணியினர் மீது விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை

கிருலப்பனையில் கூட்டு எதிரணி நடத்திய மேநாள் பேரணியில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

போருக்காக 4 பில்லியன் டொலர் செலவிட்டதாக கூறுகிறார் மகிந்த

தனது அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் வெளிநாடுகளிடம் வாங்கப்பட்ட கடனில் மூன்றில் ஒரு பங்கு, போருக்காக செலவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

மைத்திரியின் உத்தரவை மீறி மகிந்த அணியின் பேரணியில் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தடையையும் மீறி, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று கூட்டு எதிரணி கிருலப்பனையில் நடத்திய மேநாள் பேரணியில் கலந்து கொண்டனர்.

சாவகச்சேரி வெடிபொருளுடன் தொடர்புடையோர் இந்தியாவுக்கு தப்பினராம்

சாவகச்சேரியில் கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள், இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

16 வயது வரை சிறுவர்கள் பாடசாலை செல்வது கட்டாயம் – மீறும் பெற்றோருக்கு தண்டனை

சிறிலங்காவில் 5 வயதுக்கும், 16 வயதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வது கட்டாயமாக்கப்படவுள்ளது.  ஏற்கனவே, 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்றிருந்த கட்டளை, தற்போது, 16 வயது வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரணில் வழங்க முன்வந்த பிரிகேடியர் பதவியை சம்பந்தன் நிராகரிப்பு

சம்பந்தன் இராணுவத்தில் இணைய விரும்பினால் அவருக்கு பிரிகேடியர் கேணல் அல்லது கேணல் இன் சீவ் பதவியை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

பரபரப்பான சூழலில் சிறிலங்காவின் மே நாள் பேரணிகள் – பிளவுபடும் சுதந்திரக் கட்சி?

உலகத் தொழிலாளர் நாளான- இன்று சிறிலங்காவின் பிரதான கட்சிகளில் ஒன்றான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பிளவுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.