இன்று பிரித்தானியா செல்கிறார் சிறிலங்கா அதிபர் – கமரூனிடம் உதவி கோருவார்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக இன்று இரவு பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளார். நாளை மறுநாள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு தொடர்பான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன லண்டன் செல்லவுள்ளார்.