மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண் உறுப்பினர்களின் நியமனம் – இன்றைய கூட்டத்தில் முடிவு

புதிய கலப்பு முறையின் கீழ் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில்,  25 வீதம் பெண் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் பதவியேற்கிறது புதிய ஐதேக அமைச்சரவை

கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றிரவு விலகியுள்ள நிலையில், நாளை மறுநாள், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த மீள்வருகை – வெளிநாட்டு இராஜதந்திரிகள் கவலை

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திர சமூகத்தினர் கவலையடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரியின் தொலைபேசி அழைப்பு – பேசாமல் நழுவினார் மகிந்த

கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் ஒரு கட்டத்தில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மீண்டும் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் ரணில்

அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன்,, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

செவ்வாயன்று அமைச்சரவை மாற்றம்?

கூட்டு அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம்  எதிர்வரும் 20ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மகிந்த தொலைபேசியில் அழைத்தது உண்மையே – ரணில்

மகிந்த ராஜபக்சவிடம் இருந்து தமக்குத் தொலைபேசிய அழைப்பு வந்தது உண்மையே என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுஜீவ சேனசிங்க தாவினாலும் பெரும்பான்மை பலம் உள்ளது – ஐதேக நம்பிக்கை

மகிந்த ராஜபக்சவின் கூட்டு எதிரணியின் ஆதரவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ள அதேவேளை, நாடாளுமன்றத்தில் ஐதேக அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செப்ரெம்பரில் அடுத்த பூகம்பம் – தயார்படுத்துகிறது தேர்தல் ஆணைக்குழு

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அடுத்த மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும் – சிவில் சமூகம் கோரிக்கை

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது.