மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா குறித்த அல் ஹுசேனின் கருத்துக்கு பான் கீ மூனும் ஆதரவு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்கு பொருத்தமான முறையில் கண்டனம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அமெரிக்கா வரவேற்பு

சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பொருத்தமான முறையில் கண்டனத்தை தெரிவித்துள்ளதாக, ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் கீத் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.

மகிந்த – மோடி தொலைபேசியில் பேச்சு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் பேச்சு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மரணதண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ்நாட்டு மீனவர்களும் விரைவில் இந்தியச் சிறைக்கு மாற்றம்?

கொழும்பு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களும், விரைவில் இந்தியச் சிறை ஒன்றுக்கு மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு தொடர்ந்து ஆயுத விற்பனை – பிரித்தானியா மீது குற்றச்சாட்டு

கவலைக்குரிய நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறிலங்காவில் ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தல்?

அதிபர் தேர்தலை வரும் ஜனவரி 2ம் நாள் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா வரும் சீன நீர்மூழ்கிகளை அமெரிக்காவும் கண்காணிப்பு

சிறிலங்காவில் சீன நீர்மூழ்கிகள் தரிக்கத் தொடங்கியுள்ளதை இந்திய மற்றும் அமெரிக்கக் கடற்படைகள் எச்சரிக்கையுடன் கண்காணித்து வருவதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

நடுக்கடலில் சிங்கப்பூர் கப்பல் மீட்ட ஏழு தமிழ் அகதிகளைப் பொறுப்பேற்றது பிறேசில்

ஐக்கிய அரபு குடியரசின்  ஜெபல் அலி துறைமுகத்தில் இரண்டு ஆண்டுகளாக தங்கியிருந்த ஏழு இலங்கைத் தமிழ் அகதிகளை பிறேசில் பொறுப்பேற்றுள்ளது.

போர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்க முனைகிறது சிறிலங்கா – ஐ.நா குற்றச்சாட்டு

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்கும் சிறிலங்காவின் முயற்சி, அரசாங்கத்தின் நேர்மையின் மீது கேள்விகளை எழுப்புவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல்- ஹூசெய்ன்  விசனம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை – எரிக் சொல்ஹெய்ம் வரவேற்பு

ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதற்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட கருத்தை நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வரவேற்றுள்ளார்.