மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சீனாவிடம் பாரிய போர்க்கப்பலை வாங்குகிறது சிறிலங்கா

சிறிலங்கா கடற்படைக்கு பாரிய போர்க்கப்பல் ஒன்றை சீனாவிடம் இருந்து வாங்குவது குறித்து, சீன பாதுகாப்பு அதிகாரிகளுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அமெரிக்க கடற்படையுடனான போர்ப்பயிற்சியில் சிறிலங்கா கடற்படைப்படகு கவிழ்ந்தது

அமெரிக்க கடற்படையினருடன் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று, திருகோணமலைக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர் பலியானார்.

பாகிஸ்தானிடம் 14 போர் விமானங்களை வாங்க சிறிலங்கா கொள்வனவுக் கட்டளை

சிறிலங்கா விமானப்படைக்கு ஒரு ஸ்குவாட்ரன் (14 விமானங்கள்) ஜேஎவ்-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான கொள்வனவு கட்டளைக் கடிதம், சிறிலங்கா அரசாங்கத்தினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு நிதி ஒதுக்கவில்லை – ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ள புலம்பெயர்ந்தோருக்கான விழாவுக்கு, தாம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சீன- சிறிலங்கா கொமாண்டோக்களின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

சிறிலங்கா- சீன இராணுவங்களின் சிறப்புப்படைப் பிரிவுகள் மற்றும் கொமாண்டோப் படைப்பிரிவுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி இன்று சிறிலங்காவில் ஆரம்பமாகியுள்ளது.

சீன- பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பு போர் விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா

சீன- பாகிஸ்தானிய கூட்டுத் தயாரிப்பான ஜே.எவ்-17  பலநோக்கு போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படை கொள்வனவு செய்யவுள்ளதாக தாய்வானில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்பு ஒதுக்கீடு இந்தியா, சீனாவை விட அதிகம்

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும், பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதி, ஒப்பீட்டளவில் இந்தியா, சீனா போன்ற நாடுகளை விடவும் அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.

மைத்திரி வென்றது எப்படி?- ஆராய்கிறாராம் பசில்

மைத்திரிபால சிறிசேன தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை விளக்கும், ‘யுக பெரலிய’ என்ற நூலைப் படித்துள்ளதாகவும், தமது அரசாங்கத்தின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.

உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை – சிறிலங்கா அறிவிப்பு

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்ளக விசாரணைக்கான சட்ட நடைமுறைகள் வரையப்பட்டு வருவதாகவும், இதில் அனைத்துலக  விசாரணையாளர்களுக்கோ சட்டவாளர்களுக்கோ இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

4 மாத ஆட்சியில் கடன்படுநிலையின் எல்லையைத் தொட்டது சிறிலங்கா

சிறிலங்கா அரசாங்கத்தின் செலவுகள் கட்டுமீறிச் சென்று விட்ட நிலையில், கடன்படு நிலையின் எல்லையை தொட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.