மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஜி-7 மாநாட்டு பாதுகாப்பு- ஜப்பானின் தீவிரவாத முறியடிப்பு பிரிவு சிறிலங்காவுடன் ஆலோசனை

ஜப்பானின் தீவிரவாத முறியடிப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அகிரா சுகியாமா சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம், சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை இவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சீனாவின் திட்டங்களை விரைவுபடுத்த மூவர் அணியை நியமித்தார் ரணில்

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகளையும் திட்டங்களையும் விரைவுபடுத்துவதற்காக உயர்மட்ட மூவர் அணியொன்றை நியமித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சிறிலங்காவுக்கான உதவிகள் தனிநபர்களையோ கட்சிகளையோ சார்ந்ததாக இருக்காது – சீன அதிபர்

சிறிலங்காவுக்கான சீனாவின் உதவிகள், கொள்கைகளின் அடிப்படையிலும், சிறிலங்கா மக்களின் நலன் அடிப்படையிலுமே இருக்குமே தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களைச் சார்ந்ததாக இருக்காது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர திட்டத்தை விரைவுபடுத்த சீனா- சிறிலங்கா இணக்கம் – இழப்பீடு குறித்து சீனா மௌனம்

முடங்கியுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் சீனாவும் சிறிலங்காவும், உறுதியுடன் இருப்பதாக, சீனாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- சீனா இடையே ஏழு உடன்பாடுகள் கைச்சாத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் நேற்று ஏழு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

கொழும்பில் பணியகத்தை திறக்கிறது சீன அபிவிருத்தி வங்கி

சீன அபிவிருத்தி வங்கியின் பணியகம் ஒன்று விரைவில் கொழும்பில் திறக்கப்படவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சீன அபிவிருத்தி வங்கியின் தலைவர், ஹு ஹுவாய்பாங்கிற்கும் இடையில் நேற்று பீஜிங்கில் நடந்த சந்திப்பிலேயே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

சிறிலங்கா- சீனப் பிரதமர்கள் சந்திப்பு – 500 மில்லியன் யுவான் கொடை வழங்குகிறது சீனா

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர்   ரணில் விக்கிரமசிங்க நேற்று சீனப் பிரதமர் லி கெகியாங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவுக்கு ஏன் வந்தார் போர்க்குற்ற விவகார நிபுணர்?- அமெரிக்கத் தூதரகம் அறிக்கை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர், ரொட் புச்வால்ட் மற்றும், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் மன்பிரீத் ஆனந்த் ஆகியோர் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக, அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனா சென்றடைந்தார் ரணில்- 125 மில்லியன் இழப்பீடு குறித்து முக்கிய பேச்சு

மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்று நண்பகல் கொழும்பில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு சீனத் தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.

பனாமா ஆவணங்களில் சிறிலங்கா அரசியல்வாதிகள் மூவர் – மகிந்த குடும்பத்தினரா?

உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள- பனாமா ஆவணங்களில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.