மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு நுழைவிசைவு மறுத்தது அமெரிக்கா

சிறிலங்காவின் முன்னாள் கூட்டுப்படைகளின் தளபதியும், பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவருமான, ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு, அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவிடம் மண்டியிட்டார் மைத்திரி – வேட்பாளராக நிறுத்த இணக்கம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

மைத்திரியைக் கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் போராளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன 2006ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, குண்டுவைத்துக் கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த – கருத்து வெளியிட மறுக்கிறது ஐ.நா

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவது குறித்து கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.

மாற்று அணியை அமைக்கும் முயற்சியில் மகிந்த அணி தீவிரம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து விட்ட நிலையில், மாற்று அணியொன்றை அமைத்துப் போட்டியிடும் தீவிர முயற்சியில் மகிந்த ராஜபக்ச தரப்பு இறங்கியுள்ளது.

மகிந்தவுக்கு இடம் கிடைக்குமா? – இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார் மைத்திரி

மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிப்பது தொடர்பாக இன்று காலை 10 மணியளவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு இடமளிக்க முடியாது – இன்றைய கூட்டத்தில் மைத்திரி அறிவிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு, மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் ஒன்றும் இந்தியாவின் கொல்லைப்புறம் அல்ல – சீனா கூறுகிறது

இந்தியப் பெருங்கடலின் அமைதி, உறுதிப்பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகித்தாலும், அதனைத் தனது கொல்லைப்பகுதி என்று உரிமை கொண்டாடுவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து மற்றொரு வாரிசு நாடாளுமன்றத் தேர்தலில் குதிக்கிறது

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தின் இன்னொரு வாரிசு களமிறங்கவுள்ளது. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மகனும், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான சசீந்திர ராஜபக்ச, இந்த முறை நாடாளுமன்றத் தேரதலில் முதல் தடவையாக போட்டியிடவுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த கட்சிகள், குழுக்கள் தீவிர முயற்சி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் நோக்கில், அதிகளவு கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.