மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

தன்னாட்சிக்கும் நீதிக்கும் அழுத்தம் கொடுக்கும் இலங்கைத் தமிழர்கள் – ஏஎவ்பி

தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான, பரந்துபட்ட தன்னாட்சி உரிமை, சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமான விவகாரமாக இருக்கும்.

மகிந்த ஆட்சியமைத்தால் இந்தியாவுடனான உறவு மைல்கல்லாக அமையும் – தயான் ஜெயதிலக

வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கியமானதொரு மைல் கல்லாக இந்தியாவுடனான உறவுகள் அமைந்திருக்கும் என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

வாகனங்களைப் பயன்படுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

மீரிஹானவில் சிறிலங்கா இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த வெள்ளை வான் ஒன்று காவல்துறையினரிடம் அகப்பட்டதை அடுத்து, பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் வாகனங்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கருணாவின் காலைவாரிய பிள்ளையான் – தோற்றாலும் தேசியப்பட்டியலில் இடம் உறுதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றாலும், அவருக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிணறு வெட்டக் கிளம்பியது பூதம் – பிரபாகரனின் பிராடோ வாகனத்தை பயன்படுத்திய படை அதிகாரி

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய புத்தம்புதிய பிராடோ வாகனத்தை, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

கொமாண்டோ படைப்பிரிவு தளபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா,சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பதவியில் இருந்து, நீக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அடுத்தமாதம் 30ஆம் நாள் ஜெனிவா கூட்டத்தொடருக்கு வருகிறது ஐ.நா விசாரணை அறிக்கை

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை அடுத்தமாதம் 30ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

காணாமற்போகச் செய்யப்பட்டோர் குறித்த ஐ.நா செயலணிக்குழுவின் சிறிலங்கா பயணம் இடைநிறுத்தம்

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா செயலணிக்குழு, வரும் திங்கட்கிழமை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் எல்லாத் தரப்புடனும் ஆலோசித்தே ஐ.நா உதவும் – பான் கீ மூனின் பேச்சாளர்

ஐ.நாவின் எந்த திட்டமும், சிறிலங்கா அரசாங்கம், வடக்கு மாகாணசபை மற்றும் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரதும், ஆலோசனையுடனேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிலும் கொண்டாடப்பட்ட சீன இராணுவத்தின் ஆண்டுவிழா

சீனாவில் மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்ட 88 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் சிறிலங்காவிலும் இடம்பெற்றுள்ளன.  கடந்த செவ்வாய்க்கிழமை (28ஆம் நாள்) கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி விடுதியில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.