மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

எமது புதைகுழிகளை நாமே தோண்டினோம் – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

பொது எதிரியான இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போரிடுவதற்கு, 1980களின் இறுதியில் பிரேமதாச அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கியதானது, சிறிலங்காவின் எந்தவெலாரு அரசாங்கமும் எடுத்திராத மிகவும் விரும்பப்படாத- ஆபத்தான நடவடிக்கை என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

4419 ஏக்கரில் ஒரு அங்குல நிலமும் விடுவிக்கப்படாது – யாழ். படைகளின் தளபதி

யாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்று யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

26 முன்னாள் போராளிகளுக்கு முதற்கட்டமாக விச ஊசி மருத்துவ பரிசோதனை

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது, விசஊசி ஏற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்வதற்காக, நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில், 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரனுடன் நடத்திய 45 நிமிட இறுதிச்சண்டை – விபரிக்கிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த 45 நிமிடச் சண்டையிலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும், அதற்கு முதல் நாள் நடந்த சண்டையில், புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மானும் கொல்லப்பட்டார் என்றும், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

‘நந்திக்கடலுக்கான பாதை’ யை வெளியிட்டு வைத்தார் மகிந்த

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூல் நேற்று, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பிரபாகரனை மெச்சுகிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உயர்ந்தபட்ச ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியன குறித்து புகழ்ந்துரைத்துள்ள சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற  தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இறுதிநிமிடச் சமர் வரையில் பிரபாகரனினது தலைமைத்துவம் மிகச் சிறந்ததாக இருந்தது என்றும் பாராட்டியுள்ளார்.

இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றார் போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிய, மேஜர் ஜெனரல் குணரத்ன, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நாளையுடன் ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதியுள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ (‘Road to Nandikadal’)  நூல் நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது.

நேற்றிரவு கொழும்பு வந்தார் பான் கீ மூன் – சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு

மூன்று நாள் பயணமாக நேற்றுமுன்னிரவு கொழும்பு வந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்றிரவு பேச்சுக்களை நடத்தினார்.

சிறிலங்கா இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் றொசான் செனிவிரத்ன நியமனம்

சிறிலங்கா இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் றொசான் செனிவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (30.08.2016) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.