மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா அரசின் முயற்சிகள் அனைத்துலக சமூகத்துக்குத் திருப்தி – மைத்திரியிடம் நிஷா பிஸ்வால்

சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

சிறிலங்காவுக்கு மீண்டும் ஆதரவை உறுதிப்படுத்தியது அமெரிக்கா

நல்லிணக்கம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த சிறிலங்காவுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தல்: 2 லெப்.கேணல்களை கைதுசெய்ய சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலரும், இராணுவத் தளபதியும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

நிஷா பிஸ்வாலுடன் சிறிலங்கா வருகிறார் ரொம் மாலினோவ்ஸ்கி

இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு மூத்த அதிகாரியும் கொழும்பு வரவுள்ளார்.

ஐ.நா அறிக்கை குறித்து சிறிலங்காவுடன் முக்கிய பேச்சு நடத்துகிறார் நிஷா பிஸ்வால்

ஒரு நாள் பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ள அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகீத் கடத்தல் குறித்து 4 இராணுவ அதிகாரிகள் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலை தொடக்கம் விசாரிக்கப்பட்டு வந்த நான்கு இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை நாளை மைத்திரியிடம் கையளிப்பு?

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் போர்க்குற்ற அறிக்கையின் பிரதி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தவார முற்பகுதியில் கையளிக்கப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்கூட்டியே கசியாது ஐ.நா அறிக்கை – 48 மணிநேரத்துக்கு முன்னரே சிறிலங்காவிடம் கையளிப்பு

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு 48 மணிநேரம் முன்னதாகவே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா விரைகிறார் நிஷா பிஸ்வால் – ஐ.நா அறிக்கைக்கு முன் அமெரிக்கா அதிரடி நகர்வு

தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா தேர்தலை அமெரிக்கா மூலதனமாக்க வேண்டும் – அமெரிக்க சிந்தனைக் குழாம் அறிவுரை

சிறிலங்காவின் வரலாற்று ரீதியான தேர்தல் முடிவுகளை அமெரிக்கா மூலதனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதிய அரசாங்கத்துடன், பொருளாதார, அரசியல், பாதுகாப்பு ஒத்துழைப்பு உறவுகளை முன்னேற்ற வேண்டும் என்றும், அந்த நாட்டின் பழமைவாத சிந்தனை குழாம் ஒன்று தெரிவித்துள்ளது.