மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

முன்னாள் கடற்படை தளபதியிடம் விசாரணை – புலனாய்வு அதிகாரி கைதாகிறார்

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும், குற்ற விசாரணைப் பிரிவினர், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயந்த பெரேராவிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

உடன்படாவிடின் கடும் விளைவுகள் ஏற்படும் – சுதந்திரக் கட்சிக்கு மொட்டு எச்சரிக்கை

அதிபர் தேர்தல் தொடர்பாக தங்களுடன் ஒரு புரிந்துணர்வை எட்டாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா சுமதந்திரக் கட்சிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ளது.

தோல்வியில் முடிந்த கோத்தாவின் முயற்சி

சிறப்பு மேல் நீதிமன்ற விசாரணைகளில் இருந்து தப்பிக்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

ரூபவாஹினியை வசப்படுத்தியது அரசியலமைப்பு மீறல் – சட்டநிபுணர்கள் கருத்து

சிறிலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீறுகின்ற செயல் என, சட்ட நிபுணர்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மொட்டினால் தடைப்படும் கூட்டணி – குழப்பத்தில் சுதந்திரக் கட்சி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கு, பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னமே தடையாக இருக்கிறது என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பங்காளிக் கட்சிகளை சந்திக்கும் ரணில், சஜித் – பேச்சுக்கள் சுமுகம்

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக முடிவெடுக்க, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நேற்றிரவு சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

பொதுஜன பெரமுன- சுதந்திரக் கட்சி இடையே விரிசல் அதிகரிப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும், இருதரப்புக்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நொவம்பர் 16 அல்லது 23இல் அதிபர் தேர்தல் – பீரிஸ் ஆரூடம்

சிறிலங்கா அதிபர் தேர்தல் வரும் நொவம்பர் 16 ஆம் நாள் அல்லது 23ஆம் நாள் நடக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக, அந்தக் கட்சியின் தவிசாளரான பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நான்காவது அதிபர் வேட்பாளர் அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில்  தமது கட்சிின் வேட்பாளராக துமிந்த நாகமுவ போட்டியிடுவார் என, முன்னிலை சோசலிசக் கட்சி அறிவித்துள்ளது.

புலிகள் அழிக்கப்பட்ட நாளே வாழ்வின் முக்கியமான நாள் – முரளிதரன்

2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே, எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என்று, சிறிலங்காவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.