மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோனது

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விலகியதை அடுத்து. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.

மைத்திரியுடன் இணைந்தது ரிசாத் பதியுதீன் கட்சி

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மகிந்தவை பதவியில் இருந்து அகற்றும் மேற்குலக சூழ்ச்சிக்கு மைத்திரியும் உடந்தை

தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றும் அனைத்துலக சூழ்ச்சியில் மைத்திரிபால சிறிசேன தரப்பும் தொடர்புபட்டுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குற்றம்சாட்டியுள்ளார்.

மகிந்த அரசில் இருந்து வெளியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்? – 48 மணிநேரத்தில் அறிவிப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த 48 மணிநேரத்தில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் நாளைமறுநாள் அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நாளைமறுநாள் ஆரம்பமாகவுள்ளது. இந்த தேர்தலில், 541,432 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக, சிறிலங்கா தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் மீண்டும் சீனா

சீனா தளம் அமைக்கப் போவதாக அனைத்துலக ஊடகங்களால் ஊகம் வெளியிடப்படும், அம்பாந்தோட்டையில், 16 மில்லியன் டொலர் பெறுமதியான மற்றொரு அபிவிருத்தித் திட்டத்தை சீனாவிடம் கையளித்துள்ளது சிறிலங்கா அரசாங்கம்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழுடன் ஐதேக இரகசிய ஆலோசனை

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுடன் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க இன்று காலை பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

மகிந்தவின் பரப்புரைக் கூட்டங்களில் ரிசாத் பதியுதீன் இல்லை

வன்னியிலும், மட்டக்களப்பிலும் நடைபெற்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக் கூட்டங்களில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளது.

மைத்திரியின் தேர்தல் அறிக்கை – தமிழில் கூட இல்லை

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை கூட தமிழில் வெளியிடப்படவில்லை என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மைத்திரியின் தேர்தல் அறிக்கையில் தமிழர்களுக்கு ஒன்றுமில்லை

எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.