மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மருந்து நிறுவனங்களிடம் 100 கோடி ரூபா சுருட்டிய ‘நபர்’ – அம்பலப்படுத்துகிறார் மைத்திரிபால

தேசிய மருந்துக் கொள்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் தடுப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள ஒருவர், 100 கோடி ரூபாவை மருந்து நிறுவனங்களிடம் லஞ்சமாகப் பெற்றுள்ளதாக, முன்னாள் சுகாதார அமைச்சரும், எதிரணியின் பொது வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

37 அகதிகளுடன் படகை சிறிலங்கா கடற்படையிடம் இரகசியமாக ஒப்படைத்தது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற போது, இந்தோனேசியக் கடற்பரப்பில் வைத்து அவுஸ்ரேலியக் கடலோரக் காவற்படையால் கைது செய்யப்பட்ட 37 இலங்கையர்கள் நேற்று சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன் கடற்படை இல்லத்தில் சரத் என் சில்வா – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை இல்லத்தில் தங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவுக்கு கைகொடுக்கிறது பொது பல சேனா

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனா அறிவித்துள்ளது.

பிரபாகரனை மீட்க முயன்றது அமெரிக்கா – சிறிலங்கா குற்றச்சாட்டு

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சி செய்ததாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மாவீரர் நாளை அனுஸ்டிக்க விடமாட்டோம் – பிரிகேடியர் ருவான் வணிகசூரிய

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கோ, மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கோ, சிறிலங்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கோரிக்கை

சிறிலங்கா மீதான விசாரணைகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிரணிக்குத் தாவினார் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் – சிறிகோத்தாவில் மைத்திரிபால

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். (இரண்டாம் இணைப்பு)

புத்தர் பிறந்த லும்பினியில் சிறிலங்கா அதிபர் வழிபாடு

சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நேற்று கௌதம புத்தர் அவதரித்த லும்பினிக்குச் சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார்.

20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைய காத்திருக்கின்றனராம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 15 தொடக்கம் 20 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி, எதிரணியுடன் இணையவுள்ளதாக, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை தெரிவித்துள்ளார்.