மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

தேவைப்பட்டால் பாதுகாப்புக்கு இராணுவத்தை அழைப்போம் – சிறிலங்கா காவல்துறை

நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் போது, தேவைப்பட்டால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு, சிறிலங்கா இராணுவத்தை அழைப்போம் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

மகிந்த, மைத்திரி தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள 15 மில்லியன் வாக்காளர்கள்

சிறிலங்காவில் நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு, 15 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக, சிறிலங்கா தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

குருநாகல மாவட்டத்தில் 98 வீத அஞ்சல் வாக்களிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பில், குருநாகல மாவட்டத்தில் அதிகபட்சமாக, 98 வீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக, மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.பி.ஹிதிசேகர தெரிவித்துள்ளார்.

திடீரெனப் பலமிழந்தவராக தோற்றமளிக்கும் சிறிலங்கா அதிபர் – பிபிசி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென இளைத்து – பலவீனமானவர் போலத் தோற்றமளிப்பதாக, பிபிசியின் செய்தியாளர் சாள்ஸ் ஹவிலன்ட் தெரிவித்துள்ளார்.

தாவல்களின்றி முடிந்தது மைத்திரியின் இறுதி பரப்புரை கூட்டம்

சிறிலங்கா அதிபர் தேர்தல் பரப்புரையின் இறுதிநாளான நேற்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இறுதிப் பரப்புரைக் கூட்டத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போன்று எந்த கட்சித் தாவல்களும் இடம்பெறவில்லை.

களைகட்டாத மகிந்தவின் கடைசிப் பரப்புரை மேடை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்றிரவு கஸ்பேவவில் இடம்பெற்றது.

மைத்திரியின் இறுதிப் பரப்புரைக் கூட்டத்துக்கு கடும் பாதுகாப்பு

மருதானையில், நேற்றிரவு நடந்த எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

மைத்திரியின் அரசில் அமைச்சுப் பதவிகளை ஏற்காது கூட்டமைப்பு – சுமந்திரன்

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகள் எதையும் ஏற்காது என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் திட்டத்துக்கு இராணுவம் ஒத்துழைக்காது – அனுரகுமார திசநாயக்க

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றால், பொதுமக்களுடன் இணைந்து ஜேவிபி அதற்கெதிராக போராடும் என்று ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் பரப்புரை மேடை மீது துப்பாக்கிச் சூடு – 3 பேர் காயம்

இரத்தினபுரியில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை பரப்புரை மேற்கொள்ளவிருந்து மேடை மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.