தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டியது முக்கியம் – சுமந்திரன்
தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு, வரும் அதிபர் தேர்தல் தீர்வைத் தரப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு, வரும் அதிபர் தேர்தல் தீர்வைத் தரப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ் சமூகத்தின் மனோநிலையை மாற்றும் முயற்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க.
சிறிலங்கா தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஐ.நா தலைமையிலான அனைத்துலக விசாரணை நீதியானதாக அமையாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுக்கு, முஸ்லிம் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ரஷ்ய நிபுணர்கள் குழுவொன்று இன்று கொழும்பு வரவுள்ளது.
ஐதேக ஆட்சிக்கு வந்தால், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளராக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நால்வர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, சிறிலங்காவை விட்டு வெளியேறி, பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் போர் இடம்பெற்ற காலத்தில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவுக்கு ஜப்பானிய நிபுணர் ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து செயற்படும் – சிறிலங்கா குறித்த செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.