மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மைத்திரியும், கூட்டாளிகளும் சிறிலங்கா அரசின் கண்காணிப்பில்

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் அவரது முக்கியமான உதவியாளர்களும், கண்காணிக்கப்பட்டு வருவதாக, சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியல் வங்குரோத்து அடைந்து விட்டார் மகிந்த – மைத்திரி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்து விட்டார் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே மாதிரியான உரையையே நிகழ்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.

விடுதலைப் புலிகளை மறந்து விடக்கூடாது – என்கிறார் மகிந்த

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

சீனாவுக்கு ஆப்புவைக்கும் ரணிலின் திட்டம்

அதிபர் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும், சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இல்லாதொழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில் மகிந்த பரப்புரை – சிறிலங்கா வரலாற்றில் முதல் முறை

சிறிலங்காவின் வரலாற்றில் தேர்தல் பரப்புரைகளுக்கு முதன்முறையாக, முப்பரிமாணத் தோற்றத்தை அளிக்கும், ஹொலோகிராம் தொழில்நுட்பம் (Hologram technology) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ராஜபக்ச குடும்பத்தினர் தப்பியோட விடமாட்டேன் – மைத்திரி சூளுரை

அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வெற்றிபெற்றால், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை நாட்டை விட்டுத் தப்பிச்செல்ல விடமாட்டேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹக்கீமுடன் அரசதரப்பு அவசர பேச்சு – முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநாடு செல்லத் தடை

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் அதிபர் தேர்தல் தொடர்பாக நேற்று மாலையில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

புலிகளால் இன்னமும் ஆபத்து – மகிந்த ராஜபக்ச

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்புகளால் நாட்டுக்கு இன்னமும் ஆபத்து உள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊவா மாகாணசபை, கோட்டே மாநகரசபைகளில் ஆட்சியைக் காப்பாற்ற போராட்டம்

கோட்டே மாநகரசபையில் நான்கு உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதால், அங்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூச்சல் எழுப்பியதால், கோபத்தில் பாதியில் நின்றது மகிந்தவின் உரை

தம்புள்ளையில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது, அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டு கீழ் இறங்கிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.