மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்தவை அனைத்துலக நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல விடமாட்டோம் – ஐதேக சூளுரை

எந்தவொரு சிறிலங்கா தலைவரையும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று எதிர்க்கட்சியான ஐதேக அறிவித்துள்ளது.

பாப்பரசரின் படங்களை அகற்றுங்கள் – அரசியல் கட்சிகளுக்கு கத்தோலிக்கத் திருச்சபை கண்டிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு பாப்பரசர் பிரான்சிசின் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா கத்தோலிக்கத் திருச்சபை , அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவு செலவுத் திட்டம் – எதிர்பார்ப்புகள் பொய்யாகின

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால்  சமர்ப்பிக்கப்பட்ட 2015ம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அரசதரப்புக்குப் தாவமாட்டோம் – திஸ்ஸ உள்ளிட்ட 3 ஐதேக பிரமுகர்களும் அறிவிப்பு

ஆளும்கட்சியில் தாம் இணைந்து கொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க மறுத்துள்ளார்.

தமிழீழத்தை வழங்குவதாக மேற்குலகுடன் எதிரணி இரகசிய உடன்பாடு – சிறிலங்கா அரசு குற்றச்சாட்டு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து எதிரணியினர் கூட்டு திட்டம் தீட்டியிருப்பது, அல்ஜசீரா தொலைக்காட்சிக் கலந்துரையாடல் மூலம் அம்பலமாகியுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

மகிந்தவுக்கு கொடுத்த ஆதரவை மறுபரிசீலனை செய்யும் கூட்டணிக் கட்சிகள்

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக எதிரணி அறிவித்துள்ள நிலையில், ஆளும்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் தமது முன்னைய முடிவுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இன்று மாலை 5 மணி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பெருமெடுப்பிலான கட்சித் தாவல் இடம்பெறலாம் என்று ஊடகங்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விலகிச் சென்றவர்கள் பற்றிய ஆவணங்கள் கையில் உள்ளதாம் – மிரட்டுகிறார் மகிந்த

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்றவர்கள் பற்றிய ஆவணக் கோப்புகள் தன்னிடம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

முதல் பலிக்கடா சசீந்திர ராஜபக்ச? – 4 மாகாணசபைகளின் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம்

அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மாகாணசபைகளின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதான முஸ்லிம் கட்சிகளும் எதிரணியுடன் இணையத் தயார்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக நிறுத்தும் எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.