மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

எதிர்க்கட்சியின் இனவாத நிகழ்ச்சி நிரல்- பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ரணில்

சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன மகேந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் பின்னணியில், இனவாத நிகழ்ச்சி நிரல் உள்ளது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரி பதவிஇறக்கம்

சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக சிறிலங்கா காவல்துறையின் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறை மா அதிபர் கடந்த ஜூன் முதலாம் நாள் தொடக்கம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

மலையகத் தமிழர் நலனுக்காக உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி

மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று தமிழ்க்கட்சிகள் இணைந்து- தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன. கொழும்பு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ்மக்களின் நலனுக்காக இந்தப் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கூடாது – நிமால் சிறிபால டி சில்வா

வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு கூறுவதற்கு விக்னேஸ்வரன் ஒன்றும் சிறிலங்கா அதிபர் அல்ல, யார் சொன்னாலும் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு ஓடமாட்டாராம் கோத்தா

தான் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் மூவருக்கு பிரதி அமைச்சர் பதவி – மகிந்த அணியை பலவீனப்படுத்துகிறார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

காவல்துறையினரை கல்எறிந்து கொல்லப்போவதாக எச்சரித்த மகிந்தவின் சகாவிடம் விசாரணை

மகிந்த ராஜபக்ச பிரதமரானதும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் கல் எறிந்து கொல்லப்படுவர் என்று எச்சரித்த, தென்மாகாண அமைச்சர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நியமனத்தில் சர்ச்சை – நாளை நாடாளுமன்றில் சூடு பறக்கும்

அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 19வது திருத்தச்சட்டத்துக்கு அமைய உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சபைக்கு, உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி வரும் 5ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப், வரும் 5ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.