மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து அரசஅதிகாரியாக பதவி வகிப்பதாகவும், அவர் நாடாளுமன்ற மற்றும் அரச அதிகாரி பதவிகளை ஒரே நேரத்தில் வகிப்பது, அதிகார வேறாக்க கொள்கைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அனுர அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா மனித உரிமைகள்ஆணையாளர் ஆதரவு

சிறிலங்காவில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள்- விசாரணை ஆரம்பம்

சிறிலங்கா அதிபராக ரணில் விக்கிரமசிங்க இருந்த போது வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் குறித்து, விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வோல்கர் டர்க் கொழும்பு வந்தார் – சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு

ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்று மட்டும் 117 பில்லியன் ரூபா இழப்பு

கொழும்பு பங்குச் சந்தை நேற்று ஒரே நாளில் 117 பில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்துள்ளது.

53 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்த எதிர்க்கட்சிகள்

தேசிய மக்கள் சக்தி  ஜூன் 20ஆம் திகதி வரை, சிறிலங்கா முழுவதும் 192 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்துள்ளது.

ஐ.நா ஒருங்கிணைப்பாளரின் கடிதத்திற்கு பதிலளிக்காத சிறிலங்கா

டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் என்ற ஐ.நா கொடியுடனான ஆய்வுக் கப்பலை அனுமதிப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐ.நா பணியகம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனா பயணம்

சிறிலங்காவின்  15 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துகள் குறித்து விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான- ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

திறைசேரி செயலாளர் ஆகிறார் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்  கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.