அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து அரசஅதிகாரியாக பதவி வகிப்பதாகவும், அவர் நாடாளுமன்ற மற்றும் அரச அதிகாரி பதவிகளை ஒரே நேரத்தில் வகிப்பது, அதிகார வேறாக்க கொள்கைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.


