மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலை – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை

வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

படகு வெடிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மாலைதீவு இளைஞரை நாடுகடத்தியது சிறிலங்கா

மாலைதீவு அதிபர் பயணம் செய்த படகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்தவரை, சிறிலங்கா அரசாங்கம் கொழும்பில் கைது செய்து, மாலைதீவுக்கு நாடு கடத்தியுள்ளது.

பசிலின் மனைவியும் விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறார்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்ச தலைமை தாங்கிய புஷ்பா ராஜபக்ச பவுண்டேசன் நிறுவனத்துக்கு, 3.5 மில்லியன் ரூபாவை அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி அரச வங்கி ஒன்று மாற்றியது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசியல் கைதிகள் விவகாரம் – மைத்திரி, ரணில், சந்திரிகாவைச் சந்திக்கப் போகிறதாம் கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தவாரம் பேச்சு நடத்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மைத்திரி, ரணிலுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்டரீதியாக வழக்குத் தொடுக்க முடியும் என்று, அறிவித்துள்ள சிறிலங்காவின் பிரதம நீதியரசர் கே.சிறிபவன், அவர் உள்ளிட்ட 75 பேரை அடுத்தமாதம் 15ஆம் நாள் உயர் நீதிமன்றில் முன்னிலையாகவும் பணித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை குறித்து சிறிலங்கா அதிபருடன் கோத்தா பேச்சு

போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பேச்சுக்களை நடத்தியுள்ளதாக, பல்வேறு தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 2015இல் எச்ஐவி தொற்று அதிகரிப்பு – மருத்துவ அதிகாரி தகவல்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர்கள் இந்த ஆண்டில் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய எஸ்ரிடி/எயிட்ஸ்  கட்டுப்பாட்டுத் திட்ட பணிப்பாளர், மருத்துவ கலாநிதி சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆட்சியில் திட்டமிட்ட இனஅழிப்பு – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சிறுபான்மை இனங்களுக்கு எதிராக திட்டமிட்ட இனஅழிப்பும் அடக்குமுறைகளும் இடம்பெற்றன என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

மர்மப்பொருளால் சிறிலங்காவுக்கு ஆபத்து இல்லை – கலாநிதி சந்தன ஜெயரத்ன

விண்ணில் இருந்து விழும், WTF1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப் பொருளினால் சிறிலங்காவுக்கு எந்த ஆபத்தோ, சேதமோ ஏற்படாது என்று  கலாநிதி சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைக்கு தனி நீதிமன்றம் – இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையாம்

உள்ளகப் பொறிமுறையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படுவது தொடர்பாக, தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.