மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிங்களவர்களின் நிம்மதி யார் கையில்? – சிறிலங்கா அதிபர் விளக்கம்

சிறிலங்காவில் சிங்கள பௌத்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால், இங்கு வாழும் ஏனைய இன மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மோதலுக்கு காரணமான மாணவர்கள் மீது காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதலுக்குக் காரணமான மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவுக்கு அருகதையில்லை – டிலான் பெரேரா

துருக்கியில் இராணுவப் புரட்சி ஏற்படுவதற்குக் காரணமான அமெரிக்காவுக்கு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கும் தகுதி கிடையாது என்று சிறிலங்கா அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சாத்தியமான எல்லா வழிகளிலும் சிறிலங்காவுக்கு உதவுவோம் – என்கிறது சீனா

சாத்தியமான எல்லா வழிகளிலும் சிறிலங்காவுக்கு சீனா உதவியளிக்கும் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான அதிகாரி வாங் யிங்கி உறுதியளித்துள்ளார்.

மகிந்த, கோத்தாவின் இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்டது சரியே – சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதற்கு, அரசாங்கம் எடுத்த முடிவு சரியானதே என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தாக்குதலில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை – சிறிலங்கா

பிரான்சின் தென்பகுதி நகரான நைசில் நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுடன் அமெரிக்கா நெருங்குவது ஏன்? – நிஷா பிஸ்வால் அளித்த விளக்கம்

சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தன்மைகள், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும்  பொருளாதாரத்தில் நெருக்கமான செல்வாக்கை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால்.

வட-கிழக்கின் முதல்வராக முஸ்லிம் ஒருவரை ஏற்கவும் தயார் – இரா.சம்பந்தன்

இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, படித்த, பக்குவமான முஸ்லிம் ஒருவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ரூபவாஹினி சமையல் நிகழ்ச்சியில் நிஷா பிஸ்வால்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்றார்.

சிறிலங்காவில் நடப்பதை உலகம் கவனிக்கிறது – ரொம் மாலினோவ்ஸ்கி

சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்பது உலகம் முழுழுவதிலும் உள்ள மக்களுக்கு முக்கியமான விடயமாக இருக்கிறது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்தார்.