மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

புலிகளின் குண்டு வீச்சில் இருந்து மகிந்தவைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் – என்கிறார் கோத்தா

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் இருந்து சிறிலங்கா அதிபரைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் அமைக்கப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குமாறு பரிந்துரைக்கவில்லை – பரணகம

மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் பரிந்துரை செய்யவில்லை என்று, காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் படையினரின் கௌரவத்தை பாதுகாப்போம் – மைத்திரி உறுதி

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்கும், முப்படையினரின் கௌரவத்தையும் அபிமானத்தையும் பாதுகாக்கும் கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு இருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க முடிவு – பொதுமன்னிப்பு இல்லை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வது என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தன்னையும் இராணுவத்தினரையும் போர்க்குற்றங்களில் சிக்கவைக்க முயற்சி என்கிறார் மகிந்த

தன்னைப் போர்க்குற்ற வழக்கில் சிக்க வைக்கவும், தன்னையும், சிறிலங்கா இராணுவத்தினரையும் காட்டிக்கொடுத்து ஆட்சியைத் தக்கவைக்கவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுப்போம் – இரா. சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பையும், அழுத்தங்களையும் கொடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சியே அதிபர் மாளிகையில் பதுங்குகுழி அமைத்தோம் – மகிந்த ராஜபக்ச

அதிபர் மாளிகையில், தாம் நிலத்தடி சொகுசு மாளிகையை அமைக்கவில்லை என்றும், அது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காக அமைக்கப்பட்ட பதுங்குகுழி என்றும், அதுபோன்ற பதுங்கு குழி அலரி மாளிகையிலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை – சிறிலங்கா அரசாங்கம் கைவிரிப்பு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு வழங்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சேற்றில் சிக்கினார் சிறிலங்கா அதிபர் மைத்திரி

சிறிலங்காவின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழையால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் சேற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது.

போர்க்குற்றங்களை விசாரிக்க தனி மேல் நீதிமன்றம் – சட்டங்களை வரையும் பணி ஆரம்பம்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, மேல் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.